For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் பப்லுவிடம் ரூ. 14 லட்சம் மோசடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டி.ராஜேந்தரின் அறிமுகமான -நடிகர் பப்லு என்ற பிருத்விராஜிடம் போலி ஆவணங்கள் -மூலம் -நிலத்தை விற்று ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பப்லு என்ற பெய-ரில் ஒரு தாயின் சபதம் படத்தில் டி.ராஜேந்தரால் அறி-முகப்படுத்தப்பட்டவர் பிருத்விராஜ். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக -நடித்துள்ளார். இப்போது டிவி -நாடகங்களில் -நடித்து வருகிறார், டிவிநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

சென்னை நீலாங்கரை பகுதியில் சகுந்தலா என்பவருக்குச் சொந்தமான 2 கிரவுண்ட் நிலம் உள்ளது. காரைக்குடியைச்சேர்ந்த சகுந்தலா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது நிலத்தை சகோதரர் சுப்ரமணியம் பார்த்துக்கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு -முன்பு, சகுந்தலாவின் நிலத்தின் பெயல் -நசீர் பாஷா, சேகர், கண்ணதாசன் ஆகிய 3 -ரியல்எஸ்டேட் புரோக்கர்கள், போலி ஆவணம் தயா-ரித்துள்ளனர். இந்த போலி ஆவணத்தைக் காட்டி பல-ரிடம் -நிலத்தைவிற்க -முயன்றுள்ளனர்.

இந் -நிலையில் பப்லுவை இவர்கள் அணுகியுள்ளனர். ரூ. 14 லட்சம் கொடுத்து நிலத்தை வாங்க பப்லு ஒத்துக்கொண்டார். நிலத்தை பப்லு பெய-ரில் பதிவு செய்த பின்னர் -நிலத்திற்குப் பாதுகாப்பாக ஒரு வாட்ச்மேனையும்ஏற்பாடு செய்துள்ளனர் அந்த மோசடிப் பேர்வழிகள்.

தனது சகோத-ரியின் நிலத்தைப் பார்ப்பதற்காக இந்த சமயத்தில் வந்துள்ளார் சுப்ரமணியம். அப்போது, -நிலத்தைச்சுற்றிலும் அழகான மரக் கன்றுகள் -நடப்பட்டுள்ளதையும், பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து அதிர்ந்துபோன அவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் விசாரணையின்போதுதான் பப்லு ஏமாந்த கதை தெ-ரிய வந்தது. இதையடுத்து தீவிர விசாரணை -நடத்தி3 -ரியல் எஸ்டேட் புரோக்கர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X