லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
டெல்லி:
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
மத்திய அரசுக்கும் அகில இந்திய லாரி மோட்டார் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்ததின்அடிப்படையில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
லாரிப் போக்குவரத்துக்கு 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம்நடந்தது. இதையடுத்து மத்திய அரசுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தவிவகாரம் குறித்து விவாதிக்க இரு தரப்பினரும் இணைந்து ஒரு கமிட்டியை உருவாக்குவது என்றுமுடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் போராட்டம் முடிவுக்கு வந்ததாக லாரி உரிமையாளர்கள்சங்கம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் மீது போடப்பட்ட எஸ்மா வழக்குகளை வாபஸ்பெறுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதலில் பல சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தின் தலையீட்டையடுத்தே சுமூகத் தீர்வு எட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications