காளிமுத்து, ஓ.பி, பொன்னையன் டெல்லியில் முகாம்
டெல்லி:
தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்து, நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சர்பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல மத்திய அரசின் அனுமதியைப் பெற அவர்கள்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி அப்துல் கலாமையும் அவர்கள் சந்திக்கக் கூடும் என்றுகூறப்படுகிறது.
சிகிச்சைக்காக முதலில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்த ஜெயலலிதா இப்போது லண்டன் செல்லும் முடிவில்இருப்பதாகவும், அதற்காக சசிகலா உள்ளிட்ட 18 பேருக்கு 2 மாத விசாவைக் கோரவுள்ளதாகவும் தெரிகிறது.
முதல்வர் வெளிநாட்டுப் பயணம் செய்ய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். மேலும் மருத்துவச்செலவுகளுக்கு என ஏராளமான அன்னிய செலாவணியையும் கோருவதாகத் தெரிகிறது. கோரப்பட்ட நிதியைப்பார்த்தவுடன் அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி வருகிறது.
மேலும் ஜெயலலிதாவுடன் இத்தனை பேர் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஜனாதிபதியிடம் முறையிட அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே காளிமுத்து, பன்னீர், பொன்னையன் ஆகியோர் தமிழக அரசு டெல்லியில் புதிதாகக் கட்டியுள்ளதமிழ்நாடு இல்லத்தின் கட்டடத்தையும் பார்வையிட்டனர். இந் நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஜனாதிபதிஅப்துல் கலாமை உரையாற்ற வருமாறு அழைக்கவே இவர்கள் வந்துள்ளதாக அரசின் சார்பில் செய்தி கசியவிடப்படுகிறது.