For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகளுடன் சயனைட் அருந்தி தம்பதி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் கடன் சுமை தாங்க முடியாத தம்பதி தங்களது நான்கு வயது மகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜன். இவர் ரசாயனப் பொருட்களை விற்பனை செய்து வந்தார்.தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடமும் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால், கடன் சுமையிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இந் நிலையில் நேற்றிரவு சயனைட் வாங்கி வந்தஅன்புராஜன் தனது நான்கு வயது மகளுக்குக் கொடுத்து முதலில் அவளைக் கொன்றார்.

பின்னர் மனைவிக்கும் சயனைட் தந்த அவர், தானும் அதை உண்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X