கப்பல் மோதி படகு உடைந்து 7 மீனவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கேரள மாநிலம் கொல்லம் அருகே நடுக் கடலில் தமிழக மீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில், 7 மீனவர்கள்பலியாயினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வானியக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கொல்லம் மாவட்டம்அடூர்க்கரை கடல் பகுதியில் நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கப்பல் தமிழக மீனவர்களின் படகு மீது மோதியது. இதில் படகு உடைந்து கடலில்மூழ்கியது. படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
இச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications