வாக்கு மூலம் தாக்கல் செய்யாத அழகிரிசாமி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiபெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமியின் வாக்குமூலம் இன்று மதுரைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

ஜெயலட்சுமி கடந்த 23ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த வாக்கு மூலத்தால் தமிழககாவல்துறை கலங்கிப் போயுள்ள நிலையில் இன்று அவரது தந்தை அழகிசாமி ஒரு வாக்குமூலத்தை தாக்கல்செய்வார் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வாக்குமூலத்தில் காவல்துறையினர், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சைக்குரியதகவல்கள் இடம் பெறலாம் என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலட்சுமியை தொழிலதிபர்களுக்குசப்ளை செய்த போலீசார் குறித்தும் ஜெயலட்சுமியிடம் தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் குறித்தும்தகவல்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்று காலை உயர் நீதிமன்றம் கூடியபோது, எதிர்பார்த்தபடி அழகிரிசாமி தனது வாக்குமூலத்தை தாக்கல்செய்யவில்லை.

ஜெயலட்சுமி தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தன் வாழ்க்கையை சீரழித்ததாக 21 போலீஸ் அதிகாரிகளின்பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து 3 போலீஸ் அதிகாரிகளும், 3 அமைச்சர்களின் உதவியாளர்களும்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், கோவை நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+