திருமணத்துக்கு முயன்ற அண்ணன்-தங்கை !
வேலூர்:
அண்ணன், தங்கை முறை கொண்ட இருவர் காவல் நிலையத்தை அணுகி தங்களுக்கு கல்யாணம் செய்துவைக்குமாறு கோரியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
வேலூர் மாவட்டம் பள்ளகுண்ணத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கன். அதே பகுதியைச் சேர்ந்த குப்பன்என்பவன் மகள் கீதா. இருவரும் பெரியப்பா, சித்தப்பா வீட்டுப் பிள்ளைகள் என்பதால் அண்ணன், தங்கை முறைகொண்டவர்கள்.
ஆனால் சிறு வயதிலிருந்தே பழகி வந்த இவர்களிடையே காதல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த முறை தவறியகாதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருவரும் ஊரை விட்டுக் கிளம்பி, பெங்களூர், சித்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று விட்டு இறுதியாகவேலூர் வந்தனர். அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தை அணுகி தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறுகூறியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார், இருவரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.பெற்றோர்களிடம், காதலை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை முறைகொண்டவர்கள். இந்தக் காதலை எப்படி ஏற்க முடியும் என்று பெற்றோர்கள் திருப்பிக் கேட்டனர்.
இதனால் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணன், தங்கை முறை கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ளஇந்து திருமண சட்டத்தில் இடமில்லை. எனவே உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாது, அப்படியேசெய்தாலும் அது செல்லாது என்று கூறி அவர்களை பெற்றோருடன் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.