திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல ரோப் கார்
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல ரூ. 1 கோடி செலவில் வின்ச் எனப்படும் ரோப் கார் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் ஆலயம் உள்ளது. உச்சியில் காசி விஸ்வநாதர்ஆலயமும், இஸ்லாமியர்களின் தர்ஹாவும் உள்ளன. இப்போது படிகள் வழியாகவும், சில இடங்களில்பாறைகளுடன் போராடியும் தான் இந்த வழிபாட்டுத் தலங்களை பக்தர்கள் அடைய முடிகிறது.
இந் நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு பக்தர்கள் சென்று வர வசதியாகவும், சுற்றுலாவை மேம்படுத்தும்வகையிலும் இந்த ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இதனைஅமைக்கவுள்ளது.
சுழற்சி முறையில் 3 பெட்டிகள் மேலே ஏறும் வகையிலும், 3 பெட்டிகள் கீழே இறங்கும் வகையிலும் இந்த ரோப்கார் அமைக்கப்படவுள்ளது. ஒரு பெட்டியில் 4 பேர் அமர முடியும். இத் திட்டத்துக்காக ரூ. 1 கோடிசெலவிடப்படவுள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications