ஜெ. வீட்டை நோக்கி ஊர்வலம்: முஸ்லீம்கள் கைது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதை விமர்சித்து சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா கருத்து கூறியிருந்தார்.
முதல்வர் தங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும், அவரைக் கண்டித்தும் அவரது வீட்டைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும்இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் சென்னையில் நேற்று குவிந்தனர்.
தமுமுக தலைவர் ஹைதர் அலி தலைமையில் கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் அவர்கள் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக போயஸ் தோட்டத்திற்குச் சென்று ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தக் கிளம்பினர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பல வேன்களில் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications