மயிலை கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் திருக் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை மிகவிமரிசையாக நடந்தது.
புகழ் பெற்ற தமிழக சைவத் திருத்தலங்களில் மயிலாப்பூர் கற்பாகம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவிலும்ஒன்று. இங்கு ரூ. 1.60 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25ம் தேதி யாக பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. இன்று காலை3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
காலை 7 மணியளவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர்தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications