செப். 1ல் ஜெயலட்சுமி மனு விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiபோலீசாரால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப, முன் ஜாமீன் கோரி, ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனரான கோவையைச் சேர்ந்த நகைக் கடை அதிபர்முருகவேல், தன்னிடம் 73 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஜெயலட்சுமி பணம் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக சிவகாசி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் ஒரு பஞ்சு வியாபாரியும் ரூ. 25 லட்ச மோசடி வழக்கை ஜெயலட்சுமி மீது பதிவு செய்துள்ளார்.

போலீசார் குறித்த உண்மைகளைப் போட்டு உடைத்ததால், தன் மீது இந்த போலி வழக்குகளை போலீசாரேசெட்-அப் செய்திருப்பதாகவும், இதனால் இந்த வழக்குகளில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கக் கோரியும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஜெயலட்சுமி மனு செய்துள்ளார். இந்த மனு மீதானவிசாரணை இன்று நடக்க இருந்தது.

இந்த மனு இன்று காலை நீதிபதிகள் தினகர், சிங்காரவேலர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயலட்சுமி தொடர்பான வழக்கை வேறு ஒரு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருவதால் அவரது முன்ஜாமீன் மனு குறித்த விசாரணையை அந்த பெஞ்சே நாளை மறுநாள் விசாரிக்கும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

ஜெயலட்சுமியின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டால் இன்றே அவரைக் கைது செய்ய போலீசார் தயாராகஇருந்தனர். இதன்மூலம் காவல்துறை அதிகாரிகளின் காமச் சேட்டைகள் குறித்து தினந்தோறும் ஜெயலட்சுமிஎடுத்துவிட்டு வரும் தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது ஜெயலட்சுமி போலீஸ் பாதுகாப்பில் மதுரை பெண்கள்காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் நடக்கும் விசாரணையின்போது முன் ஜாமீன் மறுக்கப்பட்டால், ஜெயலட்சுமி கைதுசெய்யப்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+