நதிகள் இணைப்பு: மத்திய அரசு மீது புகார்
டெல்லி:
நதிகள் இணைப்பு தொடர்பான பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப் போவதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகளுக்குள் நாட்டின் தேசிய நதிகளை இணைக்குமாறு உச்ச நீதிமன்றம்ஏற்கனவே மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களையும்கண்காணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந் நிலையில் ரஞ்சித் குமார், நிகில் நையார் ஆகியோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில் உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி அமைக்கப்பட்ட நதி நீர் இணைப்புக்கான கமிட்டிக்கு புதிய தலைவரைக் கூட இந்த அரசுநியமிக்கவில்லை. பாஜக அரசால் நியமித்த சுரேஷ் பிரபு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு வேறுயாரையும் இந்த அரசு நியமிக்கவில்லை என்றப புகார் கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சபர்வால், நீதிபதி தர்மாதிகாரி ஆகியோர் இன்று நடத்தினர்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் வகான்வதி, அடுத்த மாதம் கூடும் மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் நதிகள் இணைப்பு தொடர்பான விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன,இந்தப் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக அரசு கொண்டு வந்த ரூ. 5,00,000 கோடி நதிகள் இணைப்புத் திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை.இந்தத் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தர 6 வார கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications