ஆற்காட்டின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிதிமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஆற்காடு வீராசாமி மீது சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை லீதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளார். இந்தநேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் வீராசாமி.
அதில், எனக்கு 65 வயதாகி விட்டது. இரு பக்க இடுப்பிலும் முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும்,கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் எனது இடுப்பு எலும்பு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு செயற்கைஎலும்பு பொருத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் படுக்கையிலேயே இருக்கும் என்னால் நீதிமன்றத்திற்கு வந்து செல்ல முடியாது. மாடிப் படிகளில்ஏறுவதும் இயலாத காரியமாக உள்ளது. ஒரு படி ஏற வேண்டுமானால் கூட கடுமையாக வலி ஏற்படுகிறது என்றுகூறியிருந்தார்.
ஆற்காடு வீராசாமியின் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.