For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மது கடைகளுக்கு எதிரான மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு மதுக் கடைகளுக்கு எதிராக தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மதுபான விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை ஒழிப்பதற்காக தமிழக அரசே டாஸ்மாக் –நிறுவனம் மூலம் மதுவகைகளை விற்க முடிவு செய்தது. இதை எதிர்த்து தனியார் மதுக் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.

அவர்களில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பித்திருந்த 284 பேர் மட்டும் தொடர்ந்து கடை நடத்தஅனுமதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

இந் நிலையில் தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி எல்லா மதுக் கடைகளையும் அரசேஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது..

இதை எதிர்த்து தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் மனுவில்,தமிழக அரசின் அவசர சட்டம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாசலம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுக்கு முன் தேதியிட்டு அவசர சட்டம் கொண்டு வர அதிகாரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனியார்மதுக்கடைக்காரர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் கடை நடத்த இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளதால் 284மதுக்டைக்காரர்களும் விரும்பினால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று நீதிபதிகள்மேலும் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X