ஜெவை பற்றி கலாமுக்கு தெரியும்: கருணாநிதி
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரியும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏழுமலையின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு, கருணாநிதிபேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் ஒரு பெரிய வெற்றி கிடைத்துவிட்டது; இனி வேலை முடிந்து விட்டது என்று திமுகதொண்டர்கள் இருந்து விடக்கூடாது. தமிழக சட்டசபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி அப்துல் கலாமைஅதிமுக பிரதிநிதிகள் அழைத்திருக்கிறார்கள். அவர் வருகிறாரோ இல்லையோ, அழைத்த காரணம் என்ன என்பதைஉணரவேண்டும்.
ஆந்திராவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தததும், புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து சொல்லவும் அறிவுரைவழங்கவும் கலாமை அழைத்தார்கள். அவரும் வந்து சட்டசபையில் உரையாற்றினார். சின்ன குழந்தைகளைஅழைத்து கலாம் அறிவுரை சொல்லி வருகிறார். அதே போல் தமிழக சட்டசபையிலும் புத்திமதிதேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்களோ என்னவோ?
எப்படிப்பட்ட இடத்துக்கு யாரை அழைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சபாநாயகராககாளிமுத்து இருந்தாலும் ஆட்சியின் தலைவராக இருப்பவர் ஜெயலலிதா. அவர் சட்டமன்றத்தை மட்டுமல்லநீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளை கூட தாண்டிக் கொண்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சொத்து குவிப்பு வழக்கு ஆதாரங்கள், பெரும் அலைகழிப்புக்கு பின்னர்பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதையெல்லாம் மறைக்கத்தான் கலாமை அழைக்கிறார்கள்.
அவர் உலகத்தையே படித்தவர். ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தவர். அவரை ஏமாற்றினாலும் எடுத்துக்கூறும் நிலையில் உள்ள எங்களை ஏமாற்ற முடியாது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications