காளிமுத்துவுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை:
தமிழக சட்டப் பேரவையில் உரையாற்ற வருமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைக்க அதிமுகஎம்.பிக்களுடன் சபாநாயகர் காளிமுத்து சென்து தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கலாமை அழைக்கச் சென்ற சபாநாயகர் காளிமுத்து, அதிமுகவினரை மட்டும் தம்முடன் அழைத்துச் சென்றதுகண்டனத்துக்குரியதாகும். மேலும் அந்தக் குழுவில் அதிமுக எம்.பிக்களுக்கு என்ன வேலை? எம்எல்ஏக்கள் தானேகுழுவில் இடம் பெற்றிருக்க வேண்டும்? மேலும் சட்டசபை என்பது அதிமுகவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளமன்றம் அல்ல.
ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்று, குடியரசுத் தலைவருக்குஎழுதிய கடிதத்தில் காளிமுத்து கூறியிருக்கிறார். கலாமை அழைக்க அதிமுகவினரை மட்டும் அழைத்துச்செல்லுங்கள் என்று உத்தரவிட்டது பெருமைப்படத்தக்க ஜனநாயகப் பாரம்பரியமா? அந்த சந்தடிசாக்கில்கடுமையான புகார்களும், அரசியல் விமர்சனங்களும் அடங்கிய மனுவை அளித்தது அரசியல் நாகரிகமா?
சட்டசபைக்கு உரையாற்ற வருவதற்கு முன்னர், இதுபற்றியெல்லாம் அப்துல் கலாம் ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.