காவிரி: நடுவர் மன்றத்தை கலைக்க முயற்சி
பெங்களூர்:
இப்போதைய காவிரி நடுவர் மன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கர்நாடகம்கோரியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், தீர்ப்பை தாமதப்படுத்தும் நோக்கத்தில்நடுவர் மன்றத்தைக் கலைத்து விட்டு புதிய நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோஷத்தை கர்நாடகம்கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அம் மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடுவர் மன்றத் தலைவருக்கும் அதில் உள்ள இரு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதைசுட்டிக் காட்டி, மன்றத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம்கோரியுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் கருத்து:
இந் நிலையில் சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் சித்தராமையா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைப்பது தொடர்பாக சட்டப்பூர்வ கருத்தைக் கர்நாடக அரசு கோரியுள்ளது. இப் பிரச்சினை குறித்துஇதுவரை இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சட்டப்பூர்வ கருத்தை அறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சுமூகமான முறையில் நடத்தி முடிக்க தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications