காவிரி: கர்நாடகத்துக்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தை முடக்கும் கர்நாடகத்தின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பல்லாண்டுகளாக நீடித்து வரும் காவிரிப்பிரச்சனையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்அடிப்படையில் மத்திய அரசு 1991ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
இந்த நடுவர் மன்றம் கர்நாடகம், தமிழகத்துக்கு மாதா மாதம் அளிக்க வேண்டிய தண்ணீர் அளவைதீர்மானித்து இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
தொடர்ந்து நடுவர் மன்றம் தாவா சம்பந்தமான அனைத்து விசாரணைகளையும் முடித்து அடுத்த சிலமாதங்களில் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.
இந் நிலையில் கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத்தைமாற்றி அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங்அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்தப் போக்கு காவிரிப் பிரச்சனையை மீண்டும் கிடப்பில் போடுவதாகும். இதுதமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
எனவே கர்நாடகத்தின் நியாயமற்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டுமெனவும்ஏற்கனவே அறிவித்தவாறு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிட உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார் என். வரதராஜன்.