காவிரி: கர்நாடகத்துக்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தை முடக்கும் கர்நாடகத்தின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பல்லாண்டுகளாக நீடித்து வரும் காவிரிப்பிரச்சனையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்அடிப்படையில் மத்திய அரசு 1991ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
இந்த நடுவர் மன்றம் கர்நாடகம், தமிழகத்துக்கு மாதா மாதம் அளிக்க வேண்டிய தண்ணீர் அளவைதீர்மானித்து இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
தொடர்ந்து நடுவர் மன்றம் தாவா சம்பந்தமான அனைத்து விசாரணைகளையும் முடித்து அடுத்த சிலமாதங்களில் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.
இந் நிலையில் கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத்தைமாற்றி அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங்அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்தப் போக்கு காவிரிப் பிரச்சனையை மீண்டும் கிடப்பில் போடுவதாகும். இதுதமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
எனவே கர்நாடகத்தின் நியாயமற்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டுமெனவும்ஏற்கனவே அறிவித்தவாறு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிட உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார் என். வரதராஜன்.
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார்












Click it and Unblock the Notifications