நடுவர் மன்றத்துக்காக உடல், பொருள், ஆவி..
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தைக் காக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் பணயமாக வைத்துபோராடுவோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
13 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை விரைவில்அளிக்கவுள்ள நிலையில் அதைக் கலைக்க வேண்டும், மாற்றி அமைக்க வேண்டும் என கர்நாடகம்அரசு கோரியுள்ளது.
கர்நாடகத்தின் இந்த விபரீத முயற்சி, தமிழ் நாட்டை வெறும் பாலைவனமாக மாற்றும் விளைவைஏற்படுத்தக் கூடியது. இந்த முயற்சியை உடல், பொருள், ஆவி அனைத்தையும் பணயமாக வைத்துதிமுக எதிர்க்கும்.
மத்திய அரசு இதில் மெளனம் சாதிக்காமல் நடுவர் மன்றம் தொடர்ந்து இயங்கவும், விரைவில்இறுதித் தீர்ப்பை வழங்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் அறிக்கை:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது எதிர்க் கட்சிகள் தான் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்றுகேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications