அதிமுகவுடன் கைகோர்க்க தயார்: கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சனைக்காக வேறுபாடுகளை மறந்து அதிமுகவுடன் இணைந்து போராட தயாராகஇருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதிக்கு புத்து சுவாதீனமில்லை என்பது உள்பட, எனக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா கூறிவரும் எல்லா கருத்துக்களை எல்லாம் மறந்துவிட்டு, மாநிலத்தின் நலனுக்காகவும், மக்களுக்காகவும்அதிமுகவுடன் கைகோர்த்துப் போராட நான் தயாராக இருக்கிறேன்.
மாநில நலனுக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து குரல் கொடுத்த திமுக ஒருபோதும்தயங்கியதில்லை. ஆனால், கடந்த காலங்களில் ஒத்துழைக்க மறுத்தது யார் என்பதை மக்கள்அறிவார்கள்.
அதே நேரத்தில் காவிரி பிரச்சனையில், எதிர்க் கட்சிகளுக்கு எச்சரிக்கும் விடுக்கும் வகையில்முதல்வர் அழைப்பு விடுப்பது சரியல்ல.
காவிரி நடுவர் மன்றத்தை முடக்கும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க திமுக எதையும் செய்யும்.இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பதை ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.