For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

தருமபுரி:

வரும் சட்டசபைத் தேர்தலுக்குள் தமிழக தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்படும் என்று மாநில தேர்தல்ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சட்டப் பேரவை,நாடாளுமன்றத் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பது குறித்து முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி கூறியதாவது:

கடந்த 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 234 தொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கு கமிஷன்அமைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை மாற்றியமைக்கமுடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் மக்கள் தொகை 6.24 கோடி ஆகும். 2.66 லட்சம் மக்களுக்கு ஒரு சட்டசபைத் தொகுதி என்ற வகையில்தொகுதி எல்லைகள் வரையறுக்கப்படும்.

தொகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின்பு, இது குறித்த அறிக்கை மத்திய, மாநில அரசு இதழ்களில்வெளியிடப்படும். பின்னர் தொகுதி வாரியாக மக்களிடம் கருத்து கேட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். 2006-ம்ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குள் இப்பணிகள் முடிவடையும்.

தொகுதி எல்லைகளை மாற்றி அமைப்பதால் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில், எந்த வித மாற்றமும்இருக்காது. திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும், தஞ்சாவூரில் 2 தொகுதிகளும் குறைக்கப்படும்.

அதே நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும், திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதலாக 2 தொகுதிகளும் உருவாக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X