பொடா: சிபிஐ விசாரணை கோரும் நக்கீரன் கோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீது பொடா வழக்கு போடப்பட்டது, இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்ட விதம் ஆகியவைகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் நக்கீரன்ஆசிரியர் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.

அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது, தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஆகியகாரணங்களைக் காட்டி நக்கீரன் கோபால் பொடா சட்டத்தில் கைது செய்யப்படடார்.

இவர் மீது இந்த வழக்கு போடப்பட்டது சரியா என்பது குறித்த மனு பொடா மறு ஆய்வுக் கமிட்டிமுன் விசாரணையில் உள்ளது. இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில் நான் பொடாவில் கைது செய்யப்பட்ட விதம், அதன் பின்னணி, வழக்கு போடப்பட்டதற்கானகாரணங்கள், முதலில் வேறு வழக்கில் கைது செய்துவிட்டு பின்னர் அதை பொடா வழக்காகமாற்றியது ஆகியவை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம் தமிழக அரசுக்கும் சிபிஐக்கும் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார். இதற்கு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில்நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி விசாரணைக்காக சிபிசிஐடி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டகோபால் பின்னர் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அது பொடாவழக்காக மாற்றப்பட்டது.

252 நாள் சிறையில் இருந்த அவர் டிசம்பர் 20ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இவர் மீதானவழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+