ஜன. 1-ல் சேது சமுத்திர பணிகள் தொடங்கும்
மதுரை:
சேது சமுத்திரத் திட்டப் பணிகளை அடுத்த வருடம் ஜனவரி 1-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டிதொடங்கி வைக்கிறார்.
ரூ. 2,000 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடங்க நேற்று முன் தினம் நடந்த மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து தூத்துக்குடி துறைமுகபொறுப்புக் கழகத் தலைவர் ரகுபதி கூறியதாவது:
வரும் ஜனவரி மாதம் இத்திட்டத்தை தொடங்கினால் 18 மாதங்களில் பணிகளை முடித்து 2007-ம் ஆண்டில் இக்கால்வாயில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்து விடலாம். இத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்பும், தொழில் வளர்ச்சியும் பெருகும்.
இத் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது. பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் 12.8 மீட்டர் ஆழத்துக்குகடலில் கால்வாய் தோண்ட வேண்டும் என்ற சில துறைமுகத்தினர் விடுத்த கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.10.7 மீட்டர் மட்டுமே ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தைத் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்க மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications