காவிரி: வாசனின் கோரிக்கை
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரி கர்நாடகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைமுறியடிக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனே நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் முயற்சிகளில் கர்நாடகம்இறங்கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு இந்த முடிவுஎடுக்கப்பட்டுளளது.
எனவே தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து, கர்நாடகத்தின் முயற்சிகளைமுறியடிக்க முடிவெடுக்க வேண்டும்.
தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு சம்பா பயிருக்குப் போதுமானதாக இல்லை. கர்நாடகம் தண்ணீர்கொடுத்தால்தான் சம்பா பயிரைப் பாதுகாக்க முடியும்.
இந் நிலையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரவுள்ள நிலையில் அதைத் தடுத்து தமிழகத்திற்கு பெரும்பாதகம் விளைவிக்க கர்நாடக அரசும், அரசியல்வாதிகளும் நினைப்பது மிகவும் கொடுமையானது என்றுகூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications