For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொடா சட்டம் விரைவில் ரத்து: மன்மோகன் சிங்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பொடா சட்டத்தை ரத்து செய்ய விரைவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதமராகப் பதவியேற்ற பின்பு முதன் முறையாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்திய மன்மோகன் சிங்அப்போது கூறியதாவது:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பொடா சட்டத்தை ரத்து செய்யும் வகையில் மசோதாகொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றப் பணிகள் சுமுகமாக நடைபெறாததால், அதுநிறைவேறவில்லை.

இருப்பினும், பொடா சட்டத்தை ரத்து செய்ய மத்திய விரைவில் அவசரச் சட்டம் கொண்டுவரும்.

நதிநீர் பகிர்வுப் பிரச்சினை மிகவும் உணர்வுப் பூர்வமானது. நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்த செய்து பஞ்சாப் அரசுசட்டம் நிறைவேற்றியிருப்பது கவலையளிக்கிறது.

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் கூடிப் பேசி ஒருமித்தகருத்தை எட்ட வேண்டும்.

ஆட்சியைப் பிடிக்கும் உரிமை அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு என்றாலும், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியைஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும்.

வீரசாவர்க்கர் குறித்து மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்தக் கருத்து. மத்திய அரசின்கருத்தல்ல.

இந்தியா-, சீனா நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண இந்தியாவிரும்புகிறது. இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 20ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சீனா அடைந்துள்ள முன்னேற்றம் காரணமாக அந்நாட்டின் மீது எனக்குநன்மதிப்பு உண்டு. சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செல்ல ஆர்வமாக உள்ளேன்.

பிரதமர் பதவி சவாலானது, கெளரவமானது. இப் பதவியில் அமர வேண்டும் என்று நான் விரும்பவில்லை.ஆனாலும் இதை நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன் என்றார் மன்மோகன் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X