யானைக்கால் மாத்திரை: மேலும் இருவர் சாவு
திருச்சி - பெரம்பலூர்:
வயதானவர்களுக்கு யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை கொடுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் இந்த மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி உள்ளிட்ட மேலும் இருவர் பலியாகியுள்ளார்.
திருச்சி காஜாமலை, கருமண்டபம் ஆகிய பகுதிகளில் யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை சாப்பிட்ட 4 பேர்இறந்தனர். இறந்த நான்கு பேரும் வயதான பெரியவர்கள்.
இந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன்,
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை வயதானவர்களுக்கு வழங்கக் கூடாது என்று சுகாதாரத்துறைஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். மேலும், ஆஸ்த்மா, இதயநோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையைசாப்பிடக் கூடாது.
ஆனால் சம்பவம் நடந்த பகுதிகளில் வயதானவர்களுக்கு இந்த மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.இறந்தவர்களுக்கு வேறு நோய் ஏதாவது இருந்ததா என்பது குறித்தும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இந்தமாத்திரை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரில்..
திருச்சியை ஒட்டிய மாவட்டமான பெரம்பலூரிலும் சந்தானம் என்ற மூதாட்டியும் யானைக்கால் மாத்திரைசாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.












Click it and Unblock the Notifications