அரசின் பெயரை கெடுக்க வைகோ முயற்சி: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைக்குள் பாத யாத்திரை நடத்தி, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி, எனது அரசுக்குக் கெட்ட பெயர்வாங்கித் தரும் முயற்சிகளில் வைகோ ஈடுபட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இன்று அதிகாலை 3.45 மணிக்கு இணை கமிஷ்னர் ஷைலேந்திர பாபு தலைமையிலான போலீஸ் டீம் தீவுத் திடலில்வைத்து வைகோவை கைது செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கைவெளியிட்டார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

நடை பயணத்துக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் கூறிய பிறகும் பாத யாத்திரை நடத்தியே தீருவேன் என்றுஅறிவித்திருக்கிறார் வைகோ. அவரை போலீசார் அனுமதிக்க மாட்டார்கள்.

முக்கிய நகர்களில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நடை பயணம்நடத்த அனுமதிக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் வைகோவுக்குஅனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்திருந்தும் தடையை மீறுவேன் என்று வீறாப்பு பேசியிருக்கிறார் வைகோ. சட்டத்ததுக்கும் நீதிக்கும்வைகோ பணிய மாட்டார் என்பது இதிலிருந்து புரிகிறது.

தடையை மீறி ஊர்வலம் நடத்தி, குழப்பம் ஏற்படுத்தி எனது அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதேஅவரது ஒரே நோக்கம்.

கடந்த 41 நாட்களாக வைகோவின் நடை பயணத்துக்கு இந்த அரசு பாதுகாப்பும் கொடுத்தது. சட்டம், ஒழுங்குகெடாமல் காத்தது. இதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

வைகோ விஷயத்தில் சட்டப்படி அரசு செயல்படும். எதிர்க் கட்சிகள் என்னிடம் எதிரிக் கட்சிகள் மாதிரி நடப்பதுவழக்கமாகிவிட்டது என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.

அறிக்கை வந்த சில மணி நேரங்களில் வைகோ கைது செய்யப்பட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+