துபாயில் ரூ.1 கோடி கொள்ளை : 7 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் இந்திய கரன்சி மாற்றும் நிறுவன உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெண் உட்பட 7 இந்தியர்களைபோலீஸார் கைது செய்தனர்.
மிக் என்ற இந்தியப் பெண் உள்ளூர் விமான நிறுவனத்தில் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இவர்இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேருடன் கூட்டுச் சேர்ந்து கரன்சி மாற்றும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரிடம் கொள்ளை அடிக்கத்திட்டமிட்டனர்.
அந் நிறுவன உரிமையாளர் ஒரு கோடி ரூபாயுடன் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பின் தொடந்த இக்கும்பல், உரிமையாளரிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றது.
இச் சம்பவம் நடந்தது கடந்த மே 29ம் தேதி. இது குறித்து விசாரித்து வந்த துபாய் போலீஸார் தங்கள் விசாரணை முடிவில் மிக்உட்பட இந்தியர்கள் ஏழு பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications