காவிரி: கர்நாடகத்திற்கு உலக வங்கி கடன் மறுப்பு
பெங்களூர்:
காவிரி நீரை முழுக்க, முழுக்க தானே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கர்நாடக அரசு அமலாக்கவுள்ள பாசனத்திட்டங்களுக்காக கடன் வழங்க உலக வங்கி மறுத்துவிட்டது.
கர்நாடக அரசுக்கு உலக வங்கி அளித்த உதவித் தொகையால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மறு ஆய்வுசெய்யும் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உலக வங்கி இயக்குநர்மைக்கேல் கார்டர் கூறியதாவது:
காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர் வாரவும், அவற்றை அபிவிருத்திசெய்யவும் உலக வங்கி கடன் அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டது. காவிரி நதி நீர்ப்பிரச்சினை தொடர்பாக காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.
இதனால் காவிரி நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களுக்கு கடன் உதவி அளிக்க முடியாது என்று உலக வங்கிஏற்கனவே தெரிவித்து இருந்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் கடன் அளிக்க முடியாது என்பதைத்தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications