For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்து வழக்கு: சிறப்பு நீதிபதி பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிபச்சேபுரே பதவியேற்றுக் கொண்டார்.

வருமானத்தை மீறி முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ரூ. 66 கோடி சொத்து சேர்த்தது குறித்துஇந்த நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் கடந்த வாரம் பெங்களூர்கொண்டு வரப்பட்டுவிட்டன.

அவற்றை தமிழில் இருந்து கன்னடம், ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில்பெங்களூரைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் 20 தமிழ்ப் பேராசியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2,600 ஆவணங்களில் உள்ள சுமார் 1 லட்சம் பக்கங்களை மொழி பெயர்கக வேண்டியுள்ளது. இந்தப் பணிமுடியவே 4 மாதமாகிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றம், பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ளகட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் (விஜிலென்ஸ்)பச்சேபுரே நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக அரசின் தரப்பில் வாதாட மூத்த கர்நாடக வழக்கறிஞர்எம்.வி.தேவராஜூ நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவரை நியமனம் செய்வது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயினுடன் முதல்வர் தரம்சிங் ஏற்கனவே ஆலோசனை நடத்திவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X