2 சிங்களர்கள் கைது:ரூ. 5 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் இருவரிடம் இருந்து ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர்களை போதைப் பொருள் தடுப்புத்துறையினர் முற்றுகையிட்டுஇதனைப் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் தென் மண்டல இயக்குனர் சங்கர் ஜிவால் தலைமையிலான டீம்இந்த அதிரடி சோதனை நடத்தி ஹெராயினையும் அதை இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவரையும் கைதுசெய்தது.
மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த 4.85 கிலோ ஹெராயினை இலங்கைக்கு அவர்கள் கடத்திச் செல்லஇருந்தனர்.
இது குறித்து சங்கர் ஜிவால் கூறுகையில்,
இந்தக் கடத்தலில் இலங்கைத் தமிழர்கள் யாரும் ஈடுபடவில்லை. அதே போல சென்னையில் யாருக்கும் இதில்தொடர்பில்லை. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் சிங்களர்கள். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேசசந்தை மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும்.
இந்த ஆண்டில் மட்டும் 115 கிலோ ஹெராயினை தென் மண்டல போதைப் பொருள் தடுப்புத்துறைகைப்பற்றியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications