விசாரணைக்கு புதிய அதிகாரி நியமனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமி வழக்கை விசாரிக்க மூத்த காவல்துறை அதிகாரியான டிஐஜி மாகாளி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஜெயலட்சுமி தொடர்பான விவகாரங்களை தென் மண்டல ஐஜி ராஜேந்திரனின் மேற்பார்வையில் கூடுதல்எஸ்.பி. ஆறுமுகம் தான் விசாரித்து வந்தார்.

அவரது பரிந்துரையின்பேரில் தான் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாகஜான்ஆகியோர் உள்பட பல அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். (இதில்இளங்கோவன் தலைமறைவாக உள்ளார்)

ஆனால், ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகளில் பலரும் ஆறுமுகத்தின் ரேங்குக்குஇணையானவர்கள் அல்லது உயர் பதவியில் இருப்பவர்கள். இதனால் அவர்களிடம் ஜூனியர் அதிகாரியானஆறுமுகம் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.

குறிப்பாக எஸ்.பி. சொக்கலிங்கம், எஸ்.பி. ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதில் பிரச்சனைஏற்பட்டது.

இதையடுத்து ஆறுமுகத்துக்குப் பதிலாக போலீஸ் நிர்வாகப் பிரிவு டிஐஜியாக உள்ள மாகாளி விசாரணைஅதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்குத் தடை கோரி தமிழக போலீஸ் மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்றுதாக்கல் செய்த வழக்கில் கூட, இந்த வழக்கை மூத்த அதிகாரியைக் கொண்டு விசாரிக்கத் தயார் என்றுதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+