ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவின் தொழில்நுட்ப பரிசு
ஜோகனஸ்பர்க்:
53 ஆப்பிரிக்க நாடுகளையும் செயற்கைக் கோள் மற்றும் பைபர் ஆப்டிக் கேபிள் வழியாக ஒன்றிணைத்துத் தரஇந்தியா முன் வந்துள்ளது. இத் தகவலை ஜனாதிபதி அப்துல் கலாம் தென் ஆப்பிரிக்காவில் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கலாம் இன்று ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின்கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
நேற்று எங்கள் நாட்டுப் பிரதமருடன் பேசினேன். இந்திய-ஆப்பிரிக்க உறவை வலுப்படுத்தும் வகையில் 50மில்லியன் டாலர் செலவில், 53 ஆப்பிரிக்க நாடுகளையும் செயற்கைக் கோள் மற்றும் பைபர் ஆப்டிக்ஸ் கேபிள்மூலமாக ஒன்றிணைத்துத் தருவது என்று அப்போது நாங்கள் முடிவு செய்தோம்.
இதன் மூலம் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்கள், 53 கல்வி நிலையங்கள், 10 முக்கிய மருத்துவமனைகள்மற்றும் 53 சிறு மருத்துவமனைகள் இணைக்கப்படும். இதன் மூலம் கல்வி, மருத்துவ உதவி, ஆன்லைன் சேவைகள்ஆகியவற்றில் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் உதவியை இன்னொரு நாடு பெற முடியும்.
இதற்குத் தேவையான தொலைத் தொடர்பு டிரான்ஸ்பான்டர்களை இந்திய செயற்கைக் கோள்கள் வழங்கும்.
இந்தியாவின் ஒரு பில்லியன் மக்களின் சார்பில் ஆப்பிரிக்காவுக்கு இந்த சேவையைச் செய்து தருவதில் நான்அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications