ரயில்+கோவில்: குடும்பத்துடன் தமிழகத்தில் லாலு
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கவும் புனித யாத்திரை மேற்கொள்ளவும் ரயில்வேத் துறைஅமைச்சர் லாலு பிரதாச் யாதவ் தனது மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் 12 குழந்தைகளுடன்இன்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு பா.ம.கவைச் சேர்ந்த ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலுவும் அக்கட்சியினரும் சிறப்பான வரவேற்பளித்தனர். இன்று திருப்பதி செல்லும் லாலு திருப்பதி-காட்பாடி மின்சார ரயில்பாதையைத் துவக்கி வைக்கிறார்.
பின்னர் திருப்பதி ஆலயம் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் அவர், திருச்சானூர் அம்மனையும் தரிசித்துவிட்டு,காளகஸ்தி கோவிலுக்குச் செல்கிறார்.
நாளை ஆந்திராவில் பல ரயில் திட்டங்களைத் துவக்கி வைத்துவிட்டு மீண்டும் சென்னை வரும் அவர், 18ம் தேதிதிருவள்ளூர்-பட்டாபிராம் இடையிலான புதிய அகல ரயில் பாதையை திறந்து வைத்துவிட்டு, புதிய ரயில்திட்டங்களை பார்வையிட மதுரை செல்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கும் அவர் குடும்பத்தினருடன் செல்வார் என்று தெரிகிறது. 21ம் தேதி வரைஅவர் தமிழகத்தில் இருப்பார்.












Click it and Unblock the Notifications