திருப்பதி பிரமோற்சவம்: இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருமலை திருப்பதி ஆலய பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த விழாவை பிரம்ம தேவனே முன்னின்று நடத்துவதாக ஐதீகம். இன்று தொடங்கும் விழா வரும் 24ம் தேதிவரை நடக்கும்.
இந்த 9 நாள் பிரம்மோற்சவத்தின்போது ஸ்ரீமலையப்ப சுவாமி தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் ஊர்வலம்வந்து பக்தர்களை ஆசிர்வதிப்பார். இன்று மாலை 5.30 மணிக்கு துவாஜா ரோகனம் எனப்படும் கொடியேற்றநிகழ்ச்சி நடக்கும்.
இன்றிரவு 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி பூமாதேவி சமேதரராய், ஆதிஷேச வாகனத்தில் மாட வீதிகளில்வேங்கடேச பெருமாள் வலம் வருவார்.
20ம் தேதி கருட வாகனத்தில் வலம் வருவார். கருட சேவை எனப்படும் இந் நிகழ்ச்சி மிகப் பிரபலமானது.அன்றைய தினம் சுவாமிக்கு மகர கண்ட மாலை சாற்றப்படும். 24ம் தேதி சக்ர ஸ்நானத்துடன் கொடி இறக்கப்பட்டுபிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.












Click it and Unblock the Notifications