நெல்சன் மண்டேலாவுடன் அப்துல் கலாம் சந்திப்பு
ஜோகானஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சந்தித்துப் பேசினார்.
தென் ஆப்பிரிக்காவில் 4 நாள் சுற்றுப் பயணத்தில் உள்ள கலாம், ஜேகானஸ்பர்க்கில் மண்டேலாவை சந்தித்தார்.அப்போது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர்.
இச் சந்திப்பின்போது ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதிக்கு இந்தியாவின்சார்பில் ரூ. 70 லட்சம் வழங்குவதாக கலாம் அறிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மண்டேலா, தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்குமகத்தானது என்றார்.
கலாம் பேசுகையில், மண்டேலா ஒரு மகத்தான ஆத்மா. எனது இந்தப் பயணத்தில் நான் மறக்கவே முடியாத ஒருநிகழ்ச்சி இந்த மாமனிதரை சந்தித்தது தான். அவ-ரது லாங் வாக் டூ பிரி-டம் (விடு-த-லைக்-கான நீண்ட பய-ணம்) என்றநூலை படித்-தது முதல் அவ-ரைப் பார்க்க வேண்-டும் என்று மிக-வும் ஆவ-லாக இருந்-தேன். அவ-ரைப் பார்த்-ததுஎனக்கு மிக-வும் சந்-தோ-ஷ-மாக உள்-ளது.
மண்-டே-லா-வின் எழுத்-துக்-கள் தென் ஆப்-ரிக்-கா-வில் விடு-த-லைத் தீயை மூட்-டி-யி-ருக்-கின்-றன. சிறையில் இருந்துகொண்டே எப்படி எழு-தி-னீர்-கள் என்று அவ-ரி-டம் கேட்-டேன். அதற்கு மண்டேலா, நான் நன்-றாக டீ போடு-வேன்என்று அங்-குள்ள அதி-கா-ரிகளி-டம் கூறுவேன். தின-மும் டீ போட்-டுத் தரு-கி-றேன் என்-றும் அவர்-க-ளி-டம்சொல்வேன். இது அவர்-க-ளு-டைய கோபத்தை குறைத்-தது. அத-னால் இரவு முழு-வ-தும் எழுத வாய்ப்-புக் கிடைத்துஎன்று கூறினார்.
மண்-டேலா என்-னி-டம், நீங்-கள் காந்-தியை எங்-க-ளுக்கு தந்-தீர்-கள். நாங்-கள் மகாத்-மா-வாக அவ-ரைத் திருப்-பித்தந்-தோம் என்று கூறியதாக கலாம் தெரிவித்தார்.
முன்னதாக ராபன் தீவில் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த சிறிய அறை கொண்ட சிறைச்சாலையை கலாம் பார்வையிட்டார்.
பின்னர் டர்பனில் வெள்ளைக்காரர்களால் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட ரயில்நிலையத்தையும் அப்துல் கலாம் பார்வையிட்டார். 111 ஆண்டுகளுக்கு முன் கருப்பு மனிதர் என்று சொல்லிகாந்தியடிகளுக்கு நேர்ந்த அந்த அவமதிப்பு தான் அவரை பிற்காலத்தில் பெரும் சுதந்திரப் போராட்ட வீரராகமாற்றியது.
மகாத்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அந்த ரயில் நிலையத்தில் நினைவகமும் வைக்கப்பட்டுள்ளது. அந்தநினைவிடத்தை கலாம் , உணர்ச்சிவசப்பட்டவராய் சுற்றி வந்தார்.