பிளாஸ்டர்-ஆப்-பாரிஸ் சிலைகளை கரைக்க தடை
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பச்சைக் களிமண்ணால் ஆன சிலைகளை மட்டும் கடலில் கரைக்கலாம் என்றுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரசாயனப் பூச்சினால் ஆன விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தினகரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
அதன்படி, பச்சைக் களிமண்ணால் ஆன சிலைகளை கடலில் கரைக்கலாம். ஆனால், பிளாஸ்டர் ஆப் பாஸினால்ஆன சிலைகளையோ, ரசாயனப் பூச்சு அடங்கிய சிலைகளையோ கடலில் கரைக்கக் கூடாது.
வாட்டர் கலர் எனப்படும் தண்ணீனால் ஆன பெயிண்டுகளை மட்டுமே பயன்படுத்தி சிலைகள்தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ரசாயனத்தினால் ஆன பெயிண்டுகளால் சிலைகளுக்கு வர்ணம் பூசியிருக்கக்கூடாது.
கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கடலில் படகுகள் மூலம் சென்றுதான் சிலைகளை கரைக்க வேண்டும்.சிலைகளை உடைத்து, சிதைத்து கரைக்கக் கூடாது என்று நீதிபதிகள் தினகரன், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று காவல்துறைக்குதகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications