பெண்ணுடன் போலி காதல், கற்பழிப்பு: காவலர் கைது
வேலூர்:
இளம் பெண்ணை கற்பழித்து விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஆயுதப்படை காவலரை போலீஸார் கைதுசெய்தனர்.
வேலூர் ஆயுதப்படையில் எழுத்தராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காந்தலட்சுமி என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
காந்தலட்சுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் நெருங்கிப் பழகிய சிவக்குமார் அருகே உள்ள கிராமத்திற்கு அழைத்துச்சென்று உடலுறவு வைத்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 10ம் தேதி வேறு ஒரு பெண்ணை திடீரென சிவக்குமார் திருமணம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தகாந்தலட்சுமி தனது குடும்பத்தினடம் நடந்ததைக் கூறினார்.
இதையடுத்து வேலூர் டிஐஜியிடம் காந்தலட்சுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்திசிவக்குமாரை கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கில் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications