For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக போலீஸாருக்கு இஸ்ரேல் தற்காப்பு பயிற்சி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய சிறைச் சாலையான திஹார் சிறைச் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதமிழக காவல்துறையினருக்கு இஸ்ரேலின் தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசியாவிலேயே மிகவும் பாதுகாப்பான, பெரிதான சிறைச் சாலை திஹார் சிறைச் சாலை. அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட திஹார்சிறையிலிருந்து கைதி தப்புவது என்பது மிகவும் கடினமான விஷயம்.

அத்தகைய சிறப்பு பெற்ற திஹார் சிறைச் சாலையைப் பாதுகாத்து வருவது தமிழக சிறப்புக் காவல் படையினர் தான்.

தமிழக காவல்துறையினர், திஹார் சிறையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. மொத்தம் 1,000 தமிழககாவல் துறையினர் திஹார் சிறை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் திஹார் சிறையில் உள்ள தமிழக போலீஸாருக்கு நவீன பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளது மத்தியஉள்துறை அமைச்சகம். முதல் கட்டமாக இஸ்ரேல் நாட்டின் தற்காப்புக் கலையான கருமாக் என்ற கலையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

முதலில் 15 காவலர்களுக்கு இந்த தற்காப்புக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது. ஆயுதமே இல்லாமல் எதிரியைத் தாக்கி ஒடுக்கும்,தேவைப்பட்டால் கொல்லும், பயங்கரமான தாக்குதல் கலை இது.

தமிழக சிறப்புக் காவல் படையின் 8வது பட்டாலியன் தலைவரான சஞ்சய் குமார் இதுகுறித்துக் கூறுகையில், பயங்கர தீவிரவாதிகள் முதல்பல வகையான குற்றவாளிகள் வரை அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் மிகவும் விழிப்புடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டியது அவசியம்.

கருமாக் கலை மூலம் எப்போதும் விழிப்புணர்வுடனும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையிலும் மன பலத்தை அதிகரிக்க முடியும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X