சோனியா, சிங்குக்கு கருணாநிதி, வைகோ நன்றி
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவித்துள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், இதற்காக பெரும் உதவி புரிந்த காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கும் திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தபல்வேறு தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் எனது முதல் நன்றிகள்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க தூண்டுதலாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், செம்மொழியாக அறிவித்த பிரதமர்மன்மோகன் சிங்குக்கும் எனது நன்றிகள்.
அணில் ராமருக்கு உதவியதைப் போலத்தான் இந்த விஷயத்தில் திமுகவின் உதவியும் இருந்தது. தமிழ் செம்மொழியாகஅறிவிக்கப்பட்டதன் பெருமை திமுகவுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்று கூறியுள்ளார் அவர்.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்த வைகோ தமிழை செம்மொழியாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொடா சட்டத்தை ரத்துசெய்யும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கும் நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications