இன்று விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் கோலாகலம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி படு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
விநாயக பெருமானுக்கு மிகப் பிடித்தமான கொழுக்கட்டை, எள்ளுருண்டை, சுண்டல், பாயாசம், பொரிகடலை, அவல், அப்பம், தேங்காய்,பால், இளநீர், தேன், சர்க்கரை, முக்கனிகள், நாவல்பழம், விளாம் பழம், கரும்பு, பொங்கல், வடை, பயறு ஆகியவற்றை படையல்களாகப்படைத்து விநாயகப் பெருமானை பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட பல வண்ண, பல சைஸ் விநாயகர் சிலைகளின் விற்பனை கடந்த ஒருவாரகாலமாக படு வேகமாக நடந்து வந்தது. நேற்று மாலை முதல் பூஜைப் பொருட்களை வாங்க கடைத் தெருக்களில் கூட்டம் அலைமோதியது.
சதுர்த்தியையொட்டி தமிழகம் எங்கும் ஆயிரக்கணக்கான சிலைகள் தெருமுனைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் பூஜைகள்நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி முடிந்த பின் வரும் 26ம் தேதி வரை இந்தச் சிலைகளை தெருக்களில் வைத்திருக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.அதன் பின் சிலைகளை அகற்றிவிட வேண்டும். அவற்றை பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பர்.
சென்னை நகரில் நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களில் சென்னை நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்புக்கு காவல்துறைஅனுமதி அளித்துள்ளது.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் சிவ சேனா ஆகிய அமைப்புகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த அனுமதிதரப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள் விநாயகர் சிலைகளைக் கரைக்க நான்கு கடல் பகுதிகளை காவல்துறை ஒதுக்கியுள்ளது. எண்ணூ
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் எங்கும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications