For Daily Alerts
Just In
அக்.1ல் கேபிள் டிவி, தொலைபேசி கட்டணம் உயர்வு
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் சேவை வரி 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், வரும் 1ம்தேதி முதல் கேபிள் டிவி மற்றும் தொலைபேசிக் கட்டணம் உயர்கிறது.
2 சதவீத சேவை வரி அதிரிப்புடன் 0.2 சதவீத தீர்வை கல்வி வரியாக வசூலிக்கப்படுகிறது. எனவே மொத்தமாக10.2 சதவீதம் வரி அதிகிரித்துள்ளது.
இதனால் கேபிள் டிவி மற்றும் தொலை பேசி கட்டணங்கள் வரும் 1ம் தேதி முதல் உயர்கின்றன.
தற்போது சென்னையில் இலவச சேனல்களைப் பார்க்க 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அக்டோபரில் இருந்துரூ.2.20 காசு கூடுதலாக வசூலிக்கப்படும். கட்டண சேனல்கள் பார்ப்பவர்கள் தாம் பார்க்கும் சேனல்களின்கட்டணத்தில் 2.2 சதவீதம் கூடுதலாக செலுத்தவேண்டும்.
இதேபோல் தொலைபேசி கட்டணமும் 2.2 சதவீதம் அதிகரிக்கிறது.
Comments
Story first published: Sunday, September 19, 2004, 5:30 [IST]