மதுரை-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ்: லாலு துவக்கினார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் இருந்து டில்லி நிஜாமுதீனுக்குச் செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவ் துவக்கி வைத்தார்.
இன்று காலை லாலு பிரசாத் யாதவ் , அவரது மனைவியும் பீகார் முதல்வருமான ரப்ரி தேவி மற்றும்குழந்தைகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு மீனாட்சி அம்மனை தரிசித்தார்.
பின்பு மதுரையில் இருந்து டில்லி நிஜாமுதீனுக்குச் செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்துதுவக்கி வைத்தார். இந்த விழாவில் ரயில்வே துறை இணை அமைச்சர் வேலுவும் கலந்து கொண்டார்.
விழாவை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்து குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications