2 சிறுமிகளை கற்பழித்த ப்ளஸ் 2 மாணவன் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே டியூஷனுக்கு சென்ற எட்டு வயது சிறுமிகள் இருவரை கற்பழித்த ப்ளஸ் 2 மாணவரைபோலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மத்தூர் அத்தேரிப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ரமணி அந்தபகுதியில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இந்தத் தம்பதியின் மகன் சிவகுரு. இவன் மத்தூர்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந் நிலையில் டியூசனுக்கு வந்த குழந்தைகளை படிக்கச் சொல்லி விட்டு ரமணி கடைக்கு சென்றுள்ளார். அப்போதுசிவகுரு மட்டும் வீட்டில் இருந்துள்ளான். டியூஷன் படிக்க வந்த குழந்தைகளை வீட்டின் உள் அறைக்கு சிவகுருஅழைத்துள்ளான்.
குழந்தைகள் வராததால்,சிவகுரு அருகில் உள்ள கடைக்கு சென்று சாக்லெட் வாங்கி வந்து படுக்கையில்பரப்பியுள்ளான். சாக்லெட்டுக்கு ஆசைப்பட்டு, 8 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேர் (பெயர் விவரம்மறைக்கப்பட்டுள்ளது) உள் அறைக்கு சென்றுள்ளனர்.
உடனே கதவைத் தாழ்பாழ் போட்ட சிவகுரு, இருவரையும் மாறி மாறி கற்பழித்துள்ளான். சிறுமிகள் இருவரும்கதறியபடி வீட்டிற்கு சென்றுள்ளனர். பெற்றோர்கள் பலமுறை கேட்டும் அவர்களால் பதில் செல்ல முடியவில்லை.இதனையடுத்து டியூசன் படித்த மற்ற குழந்தைகளின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது தான் இரு சிறுமிகளையும் சிவகுரு கற்பழித்தது தெரியவந்தது. பின்னர் மத்தூர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தனர். அதன் பேரில் சிவகுருவை போலீஸார் கைது செய்தனர். தற்போது இரு சிறுமிகளும்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications