அமெரிக்காவில் போலி நகை விற்பனை: இந்தியர் கைது
நியூயார்க்:
அமெரிக்காவில் போலி நகைகளை விற்ற இந்தியாவைச் சேர்ந்த நக்ை கடை அதிபரும், அவருடைய பெண்உதவியாளரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நகைக் கடை வைத்திருப்பவர் விஜய் தாஸ்வானி. இந்தியரான இவர்,இதே பகுதியில் டிபானி என்ற பிரபல நகைக் கடையில் உள்ள நகைகளைப் போன்று போலியாக தயார் செய்துவிற்று வந்தார்.
இது குறித்து டிபானி நகைக் கடையினர் போலீஸில் புகார் செய்தனர். இதனையடுத்து விஜய் தாஸ்வானி கடையில்சோதனை செய்த போலீஸார், போலி நகைகள் இருப்பதைக் கையும் களவுமாக கண்டு பிடித்தனர். பின்பு விஜய்தாஸ்வானியையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஊழியரையும் கைது செய்தனர்.
கடையில் இருந்த ஏராளமான போலி நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கில்குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்ட இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications