தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவோம்: திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதுபோல, மத்தியில் ஆட்சி மொழியாக்கவும் கோரிக்கை விடுத்து அதை நிறைவேற்ற முயல்வோம்என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோத்தகிரியில் தங்கியிருந்த அவர் இன்று காலை சென்னை திரும்பினார். ரயில் நிலையத்தில் திமுகவினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்புஅளித்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கருணாநிதி பேசுகையில், தமிழ் இப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் உங்களது முகங்களில் பார்க்கிறேன்.
இத்தோடு நமது பணி நின்று விடாது. தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாக வேண்டும். அதுவரை நமது பணி தொடரும், தொடர்ந்து அந்தக்கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications