ஈவ்-டீசிங் கொலை: 2 பேர் தப்பினரா?
சென்னை:
சென்னையில் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு முக்கியப் புள்ளியின் மகனை போலீசார்தப்ப வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
தாயாருடன் மந்தைவெளியில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினியரான ஸ்டெப்னா அட்டோவா (25), நட்சத்திரஹோட்டலில் வீக்-எண்ட் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு ஸ்கூட்டரில் திரும்புகையில் காரில் விரட்டி வந்தவாலிபர்களால் கொல்லப்பட்டார். கார் மோதி அவர் இறந்தார்.
இதையடுத்து காரில் வந்ததாக ராஜா (21), வெங்டஷ்ே (24), நெஸ்லின் (16), டன்வர் (16) ஆகியோரை போலீசார்கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் காரில் இருந்த மேலும் இருவர் மீது கேஸ் போடாமல் போலீசார் தப்ப வைத்துவிட்டதாகக்கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் விவிஐபியின் மகன் என்றும், இன்னொருவர் அவரது நண்பர் என்றும்தெரிகிறது. இதனால் அவர்களை போலீசார் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஈவ் டீசிங்: பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பலி












Click it and Unblock the Notifications