For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி ஆணையத்தை கூட்ட கர்நாடகம் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காவிரி ஆணையத்தை கூட்டும் அவசியம் தற்போது இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும் கேரளாவைச்சேர்ந்த மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் வினோத் துக்கல் கூட்டத்துக்குத்தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக மாநில தலைமைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் நாராயணன், தமிழக காவிரிகண்காணிப்பு குழு தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை தமிழகத்திற்குத் தர வேண்டிய 33 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம்திறந்து விடவில்லை; அதை உடனடியாக திறந்துவிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு சார்பில்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 4 மாநில அதிகாரிகளும் விவாதித்தனர். கூட்டத்தின் முடிவில் நீர்வளத்துறைசெயலாளர் துக்கல் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்துகூட்டத்தில் விவாதித்தோம். இக் கூட்ட விவரம் குறித்து நீர் வளத்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும்தெரிவிக்கப்படும்.

காவிரி ஆணையத்தை கூட்டும் தேதியை பிரதமர் முடிவு செய்வார் என்று கூறினார்.

பின்னர் கர்நாடகத்தின் தலைமை செயலாளர் மிஸ்ரா நிருபர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் 4 சதவீதமழையும், தமிழகத்தில் 3 சதவீத மழையும் பெய்துள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. எனவேதற்போது காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்று தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X