சென்னை பள்ளிகளில் மீண்டும் வெடிகுண்டு வதந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பதறியடித்து ஓடினார்கள்.

சென்னை பள்ளிகளில் சில மாதங்களுக்கு முன்பு சரமாரியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து நகரையேபீதிக்குள்ளாக்கியது. இந் நிலையில் மீண்டும் சென்னையில் சில பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால்பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பானை தம்புச் செட்டித் தெருவில், தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு தொலைபேசியில் பேசிய நபர், பள்ளி வகுப்பறை ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக்கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீஸாருக்குத் தகவல் போனது. வெடிகுண்டு கண்டுபிடிப்புப் படையினருடன் வந்தபோலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.

முன்னதாக வெடிகுண்டு பீதி கிளம்பியவுடன் வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் பதறியடித்து வெளியேறினர்.இதனால் சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு வதந்தி காரணமாக இந்தப் பள்ளியில்நடக்கவிருந்த காலாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதேபோல, பானைப் பகுதியில் உள்ள வேறு சில பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+