For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாநிதிக்கு வைரமுத்து பாராட்டு
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவிக்க பாடுபட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து தலைமையில்கவிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு தமிழ் செம்மொழி போராட்டக் குழுத் தலைவர்வைரமுத்து தலைமையில் ஏராளமான கவிஞர்கள் இன்று சென்றனர்.
அங்கு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோருக்கு நன்றி தெரிவிக்க நூறு கவிஞர்களோடு விரைவில் டெல்லி செல்வேன் என்று வைரமுத்துகூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, September 23, 2004, 5:30 [IST]